சேலம்: சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ், நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, மல்லூர், வேங்காம்பட்டியில் நடந்த, கிராம விழிப்புணர்வு காவலர் அலுவலர் அறிமுக கூட்டத்தில், அவர் பேசியதாவது: கிராமங்களில் சட்டம் ஒழுங்கு, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க, கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அடிக்கடி கிராமங்களுக்கு வந்து, மக்களை சந்திப்பர். இவர்களிடம், மக்கள் தகவல்களை தெரிவிக்கலாம். அது, போலீசுக்கு உதவியாக இருக்கும். குற்றச்செயல்களை தடுக்க, போலீசாருக்கு தகவல் அளித்து, மக்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ஏழை மாணவர்கள், 25 பேருக்கு, நோட்டு புத்தகங்களை இலவசமாக வழங்கினார். இதில், எஸ்.பி., தீபா கானிகேர், சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE