ஓமலூர்: ஓமலூர் அருகே, செம்மாண்டப்பட்டியில், கடந்த, 1ல், முன்விரோதத்தால், இரு பிரிவினர் மோதிக்கொண்டனர். அதில், இருதரப்பிலும், 7 பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், செம்மாண்டப்பட்டி, பெரியப்பட்டி, ஊமைக்கவுண்டம்பட்டி கிராம மக்கள், 100க்கும் மேற்பட்டோர், ஓமலூர் டி.எஸ்.பி., சோமசுந்தரத்திடம், நேற்று, மனு அளித்தனர். அதில், 'செம்மாண்டப்பட்டியை சேர்ந்த லோகோஷ், 23, ஸ்ரீதர், 19, நவீன்குமார், 25, ஆகியோரை, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE