ஈரோடு: ஈரோட்டில், சர்வே துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திய போலீசார், வெறுங்கையோடு திரும்பினர். ஈரோடு, கலெக்டர் அலுவலகத்தின், ஆறாவது மாடியில், சர்வே துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, மூன்று பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதனால் கடந்த சில நாட்களாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கண்காணித்தனர். நேற்று முன்தினம் மாலை, ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மாற்றும் போலீசார், திடீர் ரெய்டு நடத்தினர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்ததாலும், எதுவும் சிக்காததால், அதிர்ச்சி அடைந்தனர். இதனால், வெறுங்கையோடு திரும்பினர். சோதனைக்கு செல்லும் தகவல், முன்கூட்டியே கசிந்து விட்டதாக, போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE