கடத்தூர்: கடத்தூர் டவுன் பஞ்சாயத்தில், நடந்து வரும் திட்டப் பணிகளை, தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, வீரகவுண்டனூர் பிரதான சாலையில், 23.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. அதே போல், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பேவர் பிளாக் சாலை அமைத்தல், கல்லாற்றில் தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட திட்டப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், நேற்று நேரில் ஆய்வு செய்தார். டவுன் பஞ்., செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE