அரூர்: அரூரில், பூட்டியுள்ள சிறுவர் பூங்காவை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 10வது, வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க., நகரில், 2010-11ல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே, பயன்பாட்டில் இருந்த சிறுவர் பூங்காவை முறையாக பராமரிக்க, டவுன் பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால் பூட்டியுள்ளது. இதனால், சிறுவர்கள் உட்பட, அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பராமரிக்கப்படாததால், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளதுடன், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மாயமாகியுள்ளன. எனவே, பல லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE