பாலக்கோடு: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால், வாந்தி, மயக்கம் அடைந்த, 20 பேர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி கொட்டாப்பள்ளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில், சில தினங்களுக்கு முன், ஒகேனக்கல் குழாய் சேதமாகி, குடிநீர் வீணாகி வந்தது. இதில் கழிவு நீரும் கலந்து வந்தது. இந்நிலையில், மூன்று தினங்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, குழாய் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் குடிநீரை குடித்த முனியம்மாள், 90, மங்கம்மாள், 75, முத்துமணி, 55, பழனியம்மாள், 45, சித்ரா, 35, தாசின், 3 உட்பட, 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE