ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், குப்பை தரம் பிரிக்கும் பணி மேற்கொள்வதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். இங்கு குடிநீர், கழிப்பிடம் வசதிகள் சரியாக இல்லை. கட்டண கழிப்பிடத்தில், அதிகளவு பணம் வசூலிப்பதால், திறந்தவெளியை பலர் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், துர்நாற்றத்தோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்டில் வைத்து, மட்கும், மட்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, வாகனங்களில் அனுப்பப்படுகிறது. இதில், உருவாகும் கொசு மற்றும் ஈக்கள், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் விற்பனையாகும் பலகாரங்களில் மொய்த்து வருகிறது. அதை வாங்கி சாப்பிடும் மக்கள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக நேரிடலாம். திருவண்ணாமலை, பெங்களூரு பஸ்கள் நிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், ஒன்று கூடும் பஸ் ஸ்டாண்டில், குப்பையை தரம் பிரித்து வருவதால், தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE