கிருஷ்ணகிரி: தி.மு.க.,வினர் வைத்த பேனரை, மர்ம நபர்கள் கிழித்தனர். கடந்த, 4 முதல் ரேஷன் கார்டுகளுக்கு, தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,500 ரூபாயை வழங்கி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் நகரில், 10க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளின் அருகில், நேற்று முன்தினம் பேனர்களை வைத்திருந்தனர். அதில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கடந்த ஒரு ஆண்டாக கொரோனா காலத்தில் தவித்து வரும் தமிழக மக்களுக்கு, 5,000 ரூபாய் வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழக அரசு பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. மீதமுள்ள, 2,500 ரூபாயையும் சேர்த்து, 5,000 ரூபாயாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று, பல இடங்களில், அந்த பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. சின்னஏரிக்கரையில் வைத்திருந்த பேனரை, மர்ம நபர்கள் கிழித்திருந்தனர். இதை பார்த்த, தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE