கிருஷ்ணகிரி: கல்லாவி அருகே, மண்ணடிப்பட்டியை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி, 45, கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 40, டிரைவர். கடந்த, 3ல் இரவு, 11:00 மணிக்கு ஏற்பட்ட பிரச்னையில், ராமமூர்த்தியின் மனைவியிடம், சஞ்சீவ் காந்தி தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி, சஞ்சீவ் காந்தியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE