போபால்: மத்திய பிரதேசத்தில் கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைக்க , பெண் ஒருவர், கணவரிடம் ரூ.1.5 கோடி பெற்று விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் சிறுமி ஒருவர் வினோதமான வழக்கை தொடுத்தார். அதாவது, தனது தந்தை, அவருடன் பணி புரியும் பெண் ஊழியருடன் முறையற்ற உறவு வைத்துள்ளதாகவும், இதனால், தங்களது பெற்றோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், இந்த பிரச்னை காரணமாக தனக்கும் தன் தங்கையின் படிப்பிற்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான தம்பதியினருக்கு கவுன்சிலிங் வழங்க உத்தரவிடப்பட்டது. கவுன்சிலிங்கில் விவாகரத்து செய்து பெண் ஊழியருடன் வாழ கணவர் விரும்பினார். ஆனால், விவாகரத்திற்கு மனைவி சம்மதிக்கவில்லை. பலகட்ட கவுன்சிலிங்கிற்கு பிறகு இருவரும் ஒரு வினோதமான ஒப்பந்தத்திற்கு சம்மதித்தனர். அதன்படி, தனது மகள்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் ரொக்கம் கொடுத்தால் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்வதாக மனைவி தெரிவித்துள்ளார். இது மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE