பள்ளிபாளையம்: குமாரபாளையம் தாலுகாவில், பொங்கலுக்கு, பயனாளிகளுக்கு வழங்க, 59 ஆயிரம் வேட்டி, 59 ஆயிரம் சேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும், அரசு சார்பில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்தாண்டு, பொங்கலுக்கு, தகுதியான பயனாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கும் பணியில், குமாரபாளையம் வருவாய் துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, தாசில்தார் தங்கம் கூறுகையில், ''குமாரபாளையம் தாலுகாவில், பொங்கலுக்கு, 59 ஆயிரத்து, 244 வேட்டி, 59 ஆயிரத்து, 244 சேலை ஒதுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE