நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டையில், ஆர்.சி.எம்.எஸ்.,ற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய் கிழமை மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். தற்போது, மஞ்சள் சீசன் முடியும் நிலையில் உள்ளதால் மூட்டை வரத்து குறைந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் வரத்து குறைந்ததால், ஏலம் பல முறை ரத்து செய்யப்பட்டது. நேற்று, விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 5,062; அதிகபட்சம், 7,239; உருண்டை ரகம், 4,612- 5,462; பனங்காலி ரகம், 6,619-7,012 ரூபாய்க்கும் ஏலம் போயின. மொத்தம், விரலி, 160 மூட்டைகள், ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE