திருச்செங்கோடு: திருச்செங்கோடு, பள்ளிபாளையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார். திருச்செங்கோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, 1,584 பேருக்கு, சைக்கிள்களை வழங்கினார். ஆர்.டி.ஓ., மணிராஜ், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
* குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட, 14 பள்ளிகளில், 2020- 21ம் கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும், 1,678 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா, பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி சைக்கிள்களை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE