நாமக்கல்: நாமக்கல்லில், தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். சென்னையில் வரும், 10ல் நடைபெறும் வக்கீல்கள் அணி மாநில மாநாட்டில் திரளான வழக்கறிஞர்களை, அழைத்து சென்று பங்கேற்க செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கவுரவ செயலாளர் அய்யாவு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE