கரூர்: கரூர் மாவட்டத்தில், மதுரை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிச்சிபாளையம், பெரியார் வளைவு ஆகிய பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், விட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை, பெரிச்சிபாளையம் பிரிவு, பெரியார் வளைவு, கோடங்கிப்பட்டி, வீரராக்கியம், அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், செம்மடை ரவுண்டானா பகுதியில், 30.11 கோடி ரூபாய் மதிப்பிலும், பெரிச்சிபாளையத்தில், 21.95 கோடி ரூபாய் மதிப்பிலும், பெரியார் வளைவு பகுதியில், 26.64 கோடி ரூபாய் மதிப்பிலும், தவிட்டுப்பாளையத்தில், 21.30 கோடி ரூபாய் மதிப்பிலும் என, மொத்தம், 100 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பெரிச்சிபாளையம், பெரியார் வளைவு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் மலர்விழி, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE