கரூர்: கரூர் மாவட்ட போலீஸ் துறை, அரெட்ஸ் நிறுவனம் மற்றும் சர்வதேச நிதிக்குழுமம் சார்பில், கேடயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தான்தோன்றிமலையில் நடந்தது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை, அதில் இருந்து தப்பித்து கொள்ள தற்காப்பு முறை, அவசர காலங்களில் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் (93845-01999, 63830-71800) குறித்த, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏ.டி.எஸ்.பி., ராதா கிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அரெட்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE