கரூர்: ரூ.1.50 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில், சோதனை ஓட்டத்தில் தண்ணீர் செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதன்படி, தொகுதி மேம்பாட்டு நிதியில் திருமுக்கூடலூர் அம்பேத்கர் நகரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், நெரூர் வடப்பாகம் ஊராட்சி ஒத்தக்கடையில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, தன் சொந்த செலவில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில் சோதனை ஓட்டமாக, தண்ணீர் செல்வதை பார்வையிட்டார். மேலும், சங்கரம்பாளையத்தில், வரத்து வாரியில், ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடுப்புச்சுவருடன் கூடிய பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE