சென்னை: தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதில், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் காமராஜூக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE