சென்னை:தமிழகத்தில், ஒரு மாதத்திற்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.
சில சமயங்களில், தினசரி விலையில் மாற்றம் செய்யப்படுவதில்லை.தமிழகத்தில், டிச., 6ல், 1 லிட்டர் பெட்ரோல், 86.25 ரூபாய்; டீசல், 78.97 ரூபாய்க்கு விற்பனையாயின. மறுநாள், பெட்ரோல் விலை, 86.51 ரூபாயாகவும்; டீசல், 79.21 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின், அவற்றின் விலை மாற்றவில்லை.ஒரு மாதத்திற்கு பின், நேற்று, பெட்ரோல் லிட்டருக்கு, 24 காசுகள் உயர்ந்து, 86.75 ரூபாய்க்கும்; டீசல் லிட்டருக்கு, 25 காசுகள் அதிகரித்து, 79.46 ரூபாய்க்கும் விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE