சென்னை:அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிராக புகார் அளித்த, ஆசிரியர் சங்க நிர்வாகியிடம், நீதிபதி கலையரசன் ஆணையம் விசாரணை நடத்தியது.
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் நிர்வாகத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.புகார்களின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணை ஆணையத்தை,தமிழக அரசு அமைத்தது.
இந்த ஆணையம் சார்பில், அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் ஆகியோருக்கு, சம்மன் அனுப்பி, ஆணையம் விசாரணை நடத்தியது.இதையடுத்து, புகார்தாரர்களிடம் நேரடி விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
சுரப்பாவுக்கு எதிராக புகார் அளித்த, தனியார் கல்லுாரி பணியாளர்கள் சங்க நிறுவனர் கார்த்திக், நேரில் ஆஜரானார். அவரிடம் ஆணையம் விசாரணை நடத்திஉள்ளது.படிப்படியாக புகார்தாரர் களிடம் விசாரணை நடத்தி, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE