கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள வடசித்துார் - நெகமம் வரையுள்ள ரோடு, 1.45 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் பணி துவங்கியுள்ளது.
வடசித்துார் - நெகமம் வரை, 10.8 கி.மீ., துாரமுள்ள ரோடு, 5.5 மீட்டர் அகலத்தில் ரோடு இருந்தது. இந்த வழித்தடத்தில் பஸ் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்தது.ஆனால், வாகனங்கள் விலகி செல்வதற்கு வசதியாக ரோடு அகலமின்றி இருந்தது. தற்போது, ரோட்டை விரிவுப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஏற்கனவே உள்ள, 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 1.5 மீட்டர் விரிவாக்கம் செய்யும் பணிக்காக, 1.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி கடந்த ஆண்டு நவ., மாதம், வடசித்துாரில் இருந்து ரோடு விரிவாக்கப்பணி துவங்கியுள்ளது.
இப்பணி ஆண்டிபாளையம் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''ஏற்கனவே உள்ள, 5.5 மீட்டர் அகலமுள்ள ரோட்டை, ஏழு மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தி, இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE