கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக வணிக வளாகம் கட்டும் பணி நடக்கிறது.
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே எட்டு கடைகள் உள்ளன. மேலும், கடைகள் விஸ்தரிப்பு செய்வதற்காக, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள இடத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதில், கீழ் தளத்தில் ஐந்து கடைகளும், மேல் தளத்தில் மூன்று கடைகளும் கட்டப்படுகின்றன.பேரூராட்சி செயல் அலுவலர் கதிர்வேல் கூறுகையில், ''வணிக வளாகம் கட்டும் பணி, வரும் பிப்., மாதத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE