கருமத்தம்பட்டி : கருமத்தம்பட்டி அருகே இரு வீடுகளில், பெண்களிடம் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி தட்டாம்புதுாரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி மணிமேகலை, 65. சம்பவத்தன்று கணவர் வெளியில் சென்ற நிலையில், தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த நபர், மணிமேகலை அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார்.அவர் கூச்சலிட்டதும், அங்கு கூடிய அக்கம் பக்கத்தினர், அந்நபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்நபர், கேரளா, இடுக்கியை சேர்ந்த, குமரன் மகன் மூர்த்தி என்று தெரிந்தது. கைது செய்யப்பட்டார்.
இதேபோல், சோளக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி லட்சுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, முகவரி கேட்பதுபோல், அருகில் வந்த மர்ம நபர்கள், லட்சுமி அணிந்திருந்த நான்கு சவரன் நகையை பறித்து சென்றனர். அவர்களை கருமத்தம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE