சூலுார், : ஒரே ஊராட்சியின் கீழ் தங்கள் கிராமத்தை சேர்க்க கோரி, பொன்னாண்டாம்பாளையம் மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தென்னம் பாளையம் -- வாகராயம்பாளையம் ரோட்டில் உள்ளது பொன்னாண்டாம்பாளையம் கிராமம். இக்கிராமம், மூன்று ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியின் கீழ் வருவதால், எந்த அடிப்படை வசதியும் மக்களுக்கும் கிடைக்கவில்லை; கிராமத்துக்கும் கிடைக்கவில்லை.அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காணாமல் காலதாமதம் செய்ததால், போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு செய்தனர். அரசு துறையினர் நடத்திய பேச்சு தோல்வியடைநத்தது. நேற்று மக்கள் திட்டமிட்டபடி குடிநீர் தொட்டி அருகே நேற்று உண்ணாவிரதத்தை துவக்கினர். பல கட்சி பிரமுகர்கள் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கணியூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது:கோர்ட் வழிகாட்டுதல்படி, ஒரே ஊராட்சியின் கீழ் எங்கள் கிராமத்தை சேர்க்கும் பணிகள் வேகமாக நடந்தன. மக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டது. அதன்பிறகு, இணைப்பு நடவடிக்கை தொய்வடைந்தது. அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவங்கினோம் போலீசார், 90க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். உடனடியாக, அனைத்து அரசு துறைகளும் இணைந்து வேலை செய்து, இணைப்பு நடவடிக்கைக்கான அரசாணையை வெளியிட அரசு முன்வர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE