உடுமலை : உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சி செயலாளர் குறிச்சிக்கோட்டைக்கும், குறிச்சிக்கோட்டை செயலாளர் சின்னவீரம்பட்டிக்கும், நேற்றுமுன்தினம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.எந்தவித முன் அறிவிப்பு இல்லாமல், திடீரென இந்த மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டுமெனவும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இரண்டாம் நாளான, நேற்றும் போராட்டம் தொடந்தது. மேலும், இதில், 16 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாக அலுவலர்களும் இந்த சங்க உறுப்பினர்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஊராட்சிகளிலும், ஒன்றிய அலுவலகத்திலும், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE