அன்னூர் : பட்டா கொடுத்து மூன்று ஆண்டுகளாகியும், இடம் தரவில்லை' என, புகார் எழுந்துள்ளது.
பிள்ளையப்பம்பாளையம், ஊராட்சி, தெலுங்குபாளையம் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், இலவச வீட்டு மனை பட்டா கோரி, பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இதையடுத்து, 2017ல் அவர்களில் 56 பேருக்கு, பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய இடம் அளந்து ஒதுக்கித் தரப்படவில்லை.பொதுமக்கள் கூறுகையில், 'எங்களுக்கு, சொந்த வீடு இல்லாததால், பல வீடுகளில், இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். பட்டா கொடுத்தும், அதற்குரிய இடத்தை அளந்து ஒதுக்கித் தரவில்லை. இதனால் வீடு கட்ட முடியவில்லை.
பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம், உடனே எங்களுக்கு உரிய இடத்தை அளந்து ஒதுக்கித் தரவேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE