பெரம்பலுார்:தாயை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மகனை, போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், சன்னாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனம், 70. கணவன் இறந்து விட்டதால், மகன் உதயகுமார், 47, என்பவருடன், வசித்து வந்தார். சொத்து தொடர்பாக, தாய், மகனுக்கு இடையே பிரச்னை இருந்துள்ளது.கடந்த நவம்பர், 29ல், தனம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, வெங்கனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனம் உடலை, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை மேற்கொண்டனர்.
கழுத்தை நெரித்து, தனம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரிந்தது. இதையடுத்து, உதயகுமாரிடம் விசாரித்தனர்.இதில், தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து, வாயில் விஷத்தை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக, நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார். உதயகுமாரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE