மேட்டுப்பாளையம் : விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறுமுகையில் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேவாபாரதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உடன் இணைந்து, சிறுமுகையில் வரும், 10ம் தேதி ரேணுகா மெடிக்கல் சென்டரில் இந்த ரத்ததான முகாமை நடத்துகிறது. ரத்தம் தானம் செய்ய விரும்புபவர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ரத்தம் நன்கொடையாக வழங்கலாம். 18 வயதுக்கு மேல், 60 வயதுக்குள் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ரத்தம் வழங்கலாம். ஏற்பாடுகளை சேவாபாரதி ஒன்றிய தலைவர் பழனிசாமி, செயலாளர் கீதா செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE