பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே தெக்குபாளையம் கிராமத்தில், விவசாயிகளால் ஆகாயம் உழவர், உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வழங்கவும், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், சரியான நேரத்தில் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கவும் நிறுவனத்தினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யா, வேளாண் அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி குமாரவடிவேல், வேளாண் வணிக அலுவலர் அன்னபூரணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், வேளாண் உதவி அலுவலர் மணி மற்றும் கூட்டு பண்ணைய உழவர், உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் பங்கேற்றனர். தலைமை செயல் அலுவலர் பிரியங்கா காந்தி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE