உடுமலை : வேளாண் சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலையில், மா.கம்யூ., மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில், மறியல் போராட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெகதீசன், போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், கட்டுமான சங்கம், விவசாய சங்கம், மோட்டார் சங்கத்தினர் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை, உடுமலை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE