கோவில்பாளையம் : வீட்டில் காய்கறி சாகுபடி செய்ய விரும்புவோர் நலன் கருதி, மாடித்தோட்ட தொகுப்பு மானிய விலையில் விற்கப்படுகிறது.
தமிழக அரசு, மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு தொகுப்பாக, தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது. இதை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, பழவகைகளை, விளைவித்து பயன் பெறலாம்.ஒரு தொகுப்பின் விலை, 850 ரூபாய். அரசு மானியம் 340 ரூபாய் போக 510 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. இதில் 2 கிலோ எடையுள்ள தென்னைநார் கழிவு கட்டிகள் ஆறு, பாலித்தீன் பைகள், வெண்டை, கத்தரி, கொத்தவரை, அவரை, கீரை, பாகற்காய் ஆகிய ஆறு விதை பாக்கெட்டுகள், உரம் மற்றும் செயல் விளக்கக் குறிப்பேடு வழங்கப்படுகிறது.
இவற்றை, கோவில்பாளையம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், சரவணம்பட்டி, ஜி.கே.எஸ்., நகரிலும், குமுதம் நகரிலும் பெறலாம். மாடித்தோட்ட தொகுப்பு தேவைப்படுவோர் 90926 21316, 95248 23302, 63831 06937 என்கிற மொபைல் எண்களில், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, எஸ்.எஸ்.குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அனிஷா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE