பழநி:பழநி முருகன் கோவிலில், ரோப் காரில் ஏறவும், இறங்கவும், தனித்தனியாக, 50 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், ரோப் காரில் மலைமேல் செல்ல, 15 மற்றும் 50 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மலையில் இருந்து இறங்க, தனியாக டிக்கெட் பெற வேண்டும்.ஊரடங்கு தளர்வுகளால், டிச., 28 முதல், ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியது. அன்று முதல் ஆன்லைனில் பதியும்பக்தர்கள், 100 ரூபாய்க்கு ரோப் கார் நிலையத்தில் டிக்கெட் பெற்று, மலை மேல் சென்று, கீழே வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 'இன்று முதல், ரோப் காரில் மலைக்கு செல்லவும், கீழே இறங்கவும் தனித்தனியே, 50 ரூபாய்க்கு டிக்கெட் பெற வேண்டும். ஆன்லைனில் பதிந்து வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என, செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE