துண்டு இறுக்கி சிறுமி பலிபோத்தனுார்: போத்தனூரை அடுத்த வெள்ளலூர், இடையர் பாளையம், மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சுபாஷிணி, 10. நேற்று முன்தினம் இரவு, சுபாஷிணி வீட்டின் ஒரு அறையிலுள்ள கதவின் கைப்பிடியில், கழுத்தை துண்டு இறுக்கிய நிலையில் காணப்பட்டாள்.அதிர்ச்சியடைந்த செல்வத்தின் மனைவி, சத்தம் போட்டுள்ளார். அருகிலிருந்தவர்கள் சிறுமியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ்சுக்கு காத்திருந்தவர் திடீர் சாவுகோவை: சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில், திருச்சி பேருந்து நிற்கும் பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்த போது, ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
13 வயது சிறுமி மாயம்சரவணம்பட்டி: சரவணம்பட்டி, விஸ்வாசபுரத்தில் மளிகை கடை நடத்தி வரும் பெண்ணின், 13 வயது மகள், தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தாயார் சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE