பந்தலுார் : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், நீலகிரி சோதனை சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கோழி வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் சமீபத்தில் வாத்துகள் பறவை காய்ச்சலால் இறந்தன. இந்நிலையில், தமிழக-- கேரளா எல்லையில், நீலகிரி மாவட்டத்தில், உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில், நேற்று காலை முதல் கிருமிநாசினி தெளித்தல், வாகன சோதனை பணியில் கால்நடை துறையினர் ஈடுபட்டனர்.
இந்த பணி குறித்து, ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை, கோவை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் கூறுகையில், ''மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் முழு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து வரும் கோழிகள், காடை, முட்டை, கோழித்தீவனம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE