ராமநாதபுரம் : ராமநாதபுரம் சந்தையில் நேற்று அன்னாசி பழம் மலிவாக கிலோ ரூ.25க்கு விற்றது.கேரளாவில் அன்னாசிப்பழம் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் மதுரை, சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ராமநாதபுரத்தில் நேற்று வாரச்சந்தை நடந்தது.இதில் பல வாகனங்களில் அன்னாசி பழம் விற்பனை களை கட்டியது. கிலோ ரூ.25க்கு விற்கப்பட்டதால் மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். இந்த சீசன் இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் தொடரும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE