ராமநாதபுரம் : சென்னை அலுவலகத்தை முன்னறிவிப்பு இன்றி சீல் வைக்க முயன்ற மத்திய அமலாக்கத்துறையினரை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் முற்றுகை நடத்தினர்.
சென்னை மண்ணடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் 1971க்கு முன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவருக்கு சொந்தமாக இருந்தது என்பதால் மத்திய அரசுக்கு சொந்தமானது, எனக்கூறி மத்திய அமலாக்கத்துறையினர் நேற்று சீல் வைக்க முயன்றனர்.கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்டது.
மத்திய அரசின் இச்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் ஏ.எம்.ஆரிப்கான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முகமது அயூப்கான், துணை தலைவர் பஷீர், மாவட்ட பொருளாளர் ரகுமான் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் தஸ்தகீர், மன்சூர், சுல்தான், ஜியாவுல்ஹக் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE