ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில்,ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாலாமணி, செயலாளர் நான்சி முன்னிலை வகித்தனர்.இதில், கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவிமுதல் மகப்பேறு வரை 24 மணிநேரம் பணியில் ஒப்பந்த செவிலியர்கள்முக்கிய பங்கு வகிக்கின்றனர். உடல்நலம் சரியில்லாத நேரத்தில் கூட விடுமுறை இல்லை. ஆறு ஆண்டு பணி நிறைபெற்று 11,000 பேரில் 2000 பேர் காலமுறை ஊதியம் பெறுகின்றனர்.
மீதியுள்ள அனைவரையும் காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், பலன்கள் அனைத்தும் வழங்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர்சேகர், பொருளாளர் நஜ்தீருன், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE