கடலாடி : கடலாடி அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை உள்ளது. சிலை சீரமைக்கப்பட்டு திறக்க ஏற்பாடு நடந்தது.
கடலாடி தாசில்தார் சீனிவாசன்,முதுகுளத்துார் டி.எஸ்.பி., ரவி உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ,போலீசார் தேவர் சிலையை துணியால் மூட முயற்சி செய்தனர்.அலுவலர்களின் இப்பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கிராம பெண்கள் தீக்குளிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்த நிலையில்,இளஞ்செம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வி.ஏ.ஓ., சரண்யா புகார் கொடுத்திருந்தார். அதில் தேவர் சிலையை துணியால் மூடச் சென்றபோது,அங்கிருந்த சிலர் என் மீது கற்கள் வீசி தாக்கினர்.மேலும் மண்ணெண்ணெய்யை என் மீது ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றனர் என குறிப்பிட்டிருந்தார். தொடர்புடையவர்கள் மீது கடலாடி எஸ்.ஐ., தமிழ்செல்வி வழக்கு பதிவு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE