வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு வர்த்தகர் சங்க பொதுக்குழுகூட்டம் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.செயலாளர் பாலசாயிகுமார், பொருளாளர் நிஜாம்கரீம் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஞானசேகர் ஆண்டறிக்கை வாசித்தார். தீர்மானங்களை துணை செயலாளர் பழனியப்பன் வாசித்தார். இணைச் செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.உணவு கட்டுப்பாடு தர நிர்ணய சட்டத்தில் நிரந்தர உரிமம் வழங்குதல், பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒத்துழைத்தல், திண்டுக்கல், மதுரை ரோட்டில் கட்டப்படும் சாக்கடையை மூட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE