திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தலைமையில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வல்லுநர் குழு அறிக்கையை தாக்கல் செய்து 2 ஆண்டுகளாகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதனை செயல்படுத்த வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அக்னேஸ், ரவிச்சந்திரன், மாநில நிதி காப்பாளர் ஜான்லியோ சகாயராஜ் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE