திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் பாலுச்சாமி மகன் மதுபாலன் 18. இவர் திண்டுக்கல் ஜம்புலியம்பட்டியில் உள்ள உறவினர் அஜித்குமார் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் 10ம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியை காதலித்தார்.சிலநாட்களுக்கு முன் சிறுமி திடீரென காணாமல் போனார். சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் மதுபாலன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உடந்தையாக இருந்த அஜித்குமார், அவரது மனைவி சிவரஞ்சனி இருந்துள்ளனர். இதையடுத்து மதுபாலன், சிவரஞ்சனியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தப்பிய அஜித்குமாரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE