காரைக்கால்; காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் இன மக்களுக்கு விலையில்லா நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி கண்ணாப்பூர், வடகட்டளை கிராமத்தில் நடந்தது.திருநள்ளாறு தொகுதி கண்ணாப்பூர் கிராமத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கினார். நெடுங்காடு தொகுதி வடகட்டளை கிராமத்தில் சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கினார். இதில் 24 பயனாளிகளுக்கு ஒரு மாத வயதுள்ள 10 நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.கால்நடைத்துறை இணை இயக்குநர் லதாமங்கேஷ்கர், கால்நடை மருத்துவர் அனந்த ராமன், நிலைய கண்காணிப்பாளர் ஜான், முனைவர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE