புதுச்சேரி; உழந்தை ஏரியில் மூழ்கிய வாலிபர் உடல் நேற்று மீட்கப்பட்டது. முதலியார்பேட்டை, இந்திரா நகர், ரோடியர் மில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், 36; கூலி தொழிலாளி. கடந்த 4ம் தேதி, இருபிள்ளைகளுடன் உழந்தை ஏரியில் மீன் பிடிக்க சென்றார். மீன்பிடிக்க துாண்டில் போட்டு, ஏரியில் குளித்த ஆரோக்கியராஜ் நீரில் மூழ்கி மாயமானார்.புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தீயணைப்பு துறையினர் மூலம் ஆரோக்கியராஜ் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 வது நாளான நேற்று காலை, ஆரோக்கியராஜ் உடல் ஏரியில் மிதந்தது.தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் உடல் கைப்பற்றப்பட்டு, கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE