புதுச்சேரி; புதுச்சேரி நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளிக்கு, தேவையான வசதிகளை ஏற்படுத்த, சிறந்த நுால்களுக்கான தமிழக அரசு விருது பெற்ற நிர்மலா நிதியுதவி வழங்கினார்.காஞ்சிமாமுனிவர் அரசினர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் நிர்மலா எழுதிய அவ்வையார் கவிதை நாடக நுால், தமிழக அரசு மூலம் சிறந்த நுாலாக தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் விருது வழங்கப்பட்டது.இந்த விருது மூலம் கிடைத்த பரிசு தொகையில் ரூ.10 ஆயிரத்தை நாவற்குளம் அரசு தொடக்கப் பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொள்ள, நுாலாசிரியர் நிர்மலா, பள்ளித் தலைமையாசிரியர் ஜாக்குலினிடம் வழங்கினார். பதிப்பாசிரியர் நிக்கி கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் பாலசுப்ரமணியன் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE