புதுச்சேரி;புதுச்சேரியில் ஒரே நாளில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது; அதேசமயம், 35 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். நான்கு பிராந்தியங்களிலும் 3,557 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 34 பேருக்கு தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் 215 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 35 பேர் நேற்று முன்தினம் தொற்றில் இருந்து மீண்டனர். மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 334 ஆகவும், மீண்டவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 327 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE