புதுச்சேரி; புதுச்சேரியில் பெய்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடானது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த 4 ம் தேதி முதல் தொடர் மழை பெய்கிறது. நேற்றுமுன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை புதுச்சேரியில் 25 மி.மீ., பத்துக்கண்ணு 11; பாகூர் 19 மி.மீ.,மழை பெய்ந்தது. நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய கன மழை 3 மணி நேரம் விடாது கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக் காடாகி, மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், பிச்சைவீரன்பேட், பூமியான்பேட்டை பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராமங்களில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.கனமழையால் பணியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நனைந்தபடி சென்றனர். கடல் கொந்தளிப்பு காரணமாக 18கிராம மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. தேங்காய்திட்டு துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE