நெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் நகராட்சியில் இ-சேவை மையத்தில் பழுதான பிரிண்டர் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் ஜாதி, இருப்பிடம், வருமானம், பிறப்பு, இறப்பு, வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்களை இலவசமாக பிரிண்ட் எடுத்துக்கொடுப்பார்கள்.ஆனால், இம்மையத்தில் கடந்த ஒரு ஆண்டாக பிரிண்டர் வேலை செய்யவில்லை.இதனால் பொதுமக்கள் தனியாரிடம் 50 ரூபாய் வரை கொடுத்து பிரிண்ட் எடுக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சுறுசுறுப்படைந்து பிரிண்டரை சீரமைத்தனர். தற்போது இந்த பிரிண்டர் மூலம் சான்றிதழ் இலவசமாக பிரிண்ட் எடுத்து தரத்துவங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE