நெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடன் பெற பதிவு செய்வதற்காக சாலையோர வியாபாரிகள் கூடியதால் பரபரப்பு நிலவியது.இந்தியா முழுதும் சாலையோர வியாபாரிகள் தொழில் செய்வதற்காக, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் வியாபாரிகள் உள்ளாட்சிகளில் பதிவு செய்து அடையாள அட்டை பெற வேண்டும். பதிவு செய்தவர்களின் விபரங்களை உள்ளாட்சிகள் அந்தந்த பகுதி வங்கிகளுக்கு அனுப்பும்.நெல்லிக்குப்பம் நகராட்சியில் இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்காக நேற்று அதிகளவு சாலையோர வியாபாரிகள் கூடியதால் பரபரப்பு நிலவியது.பதிவு செய்ய வந்த பெரும்பாலானோர் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அலட்சியமாக இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE