புவனகிரி - புவனகிரி அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ.,வினர் 180 பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி அடுத்த கீரப்பாளையம் கடைவீதியில் நடந்த மறியல் போராட்டத்திற்கு, மாவட்ட இணைச் செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார்.போராட்டத்தில், சி.ஐ.டி.யூ., சார்பில், தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பாக திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும்.நலவாரியங்களில் பதிவு செய்துள்ள அனைத்து நலவாரிய தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்ய ஆன்லைன் முறையை முறைப்படுத்த வேண்டும்.பொதுத் துறையைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.கிளியனுார், ஆதனுார் பகுதிகளில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலன் கருதி மணல் குவாரி அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE