மந்தாரக்குப்பம் - மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள 18 டயர் கடைகளுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் டெங்கு குறித்த விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சி, வடக்குவெள்ளூர் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் 18 ரீ டிரேடிங் டயர் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.அதில், 2 நாட்களுக்குள் டயரில் தேங்கி மழை நீரை அகற்றி பாதுகாப்பான இடத்தில் டயரை மாற்றி வைக்க வேண்டும்.அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE